அர்பான் நகர் என்றொரு இடம். இதில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வந்தார்கள். அழகான இந்த நகர் நாளை எரிந்து சாம்பல் ஆகும் என்று யாரும் நினைத்துகூட பார்க்கவில்லை. எங்கு நோக்கினாலும் இடிக்கபட்ட வீடுகள். புதிதாக வண்ணம் பூசப்பட்ட வீட்டின் சுவரில் படிந்திருந்த கரும்புகை, நான் பயங்கரவாதிகளால் கேஸ் அடித்து தீயூட்டப்பட்டேன் என்று சொல்லாமல் சொல்லிற்று. எரிந்த வீட்டின் உள்ளிருந்து எரிந்த போன முஸ்லிமின் உடலிருந்து வந்த அழுகிய நாற்றம் அங்கிருந்தவர்களை இங்கே வராதீர்கள். வந்தால் உங்களுக்கும் இந்த கதிதான் என்று கூறி விரட்டியடித்தது. எங்கும் துயரம், கலக்கம்.
இந்த நகரில் உள்ள முஸ்லிம்களை அழிப்பதற்காக, வகுப்புவெறியர்களின் ஒரு பெரும் கூட்டம் ரோட்டோரத்தில் வந்து கூடியது. இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த, வழிநடத்த ஒரு தளபதி தேர்ந்தெடுக்க பட்டிருந்தார். அவர் பெயர் ரவீந்தர் சர்மா. இவர் பஜ்ரங்தளத்தை சேர்ந்தவர்.

இந்த காட்சி கண்ட முஸ்லிம்கள் விழித்து கொண்டார்கள். இனி இவர்கள் நம் வீடுகளுக்கும் தீயிட்டு கொளுத்துவார்கள் என்ற பயந்து அப்போதே தயார் ஆனார்கள் (அப்போது தான் தயார் ஆனார்கள்) பதிலடி கொடுப்பதற்கு. பஜ்ரங்தளத்தினர் முன்னேறினார்கள். முஸ்லிம்களும் அவர்களை தடுத்து நிறுத்திட முயற்சி செய்தார்கள். அங்கே ஒரு தெருச்சண்டை நடந்தது. முஸ்லிம்கள் இயன்றதை செய்தார்கள். பாசிஸ காவலர்கள் முஸ்லிம்களை சுட தொடங்கினர். துப்பாக்கி சூட்டிற்கு பலியானர்கள் முஸ்லிம்கள் அனைவரும்.
உடனே பஜ்ரங்தளத்தினர், தாங்கள் தயாராக கொண்டுவந்திருந்த பெட்ரோல் மற்றும் கேஸ் சிலிண்டர்களையும் திறந்துவிட்டார்கள் முஸ்லிம்களின் வீடுகளின் மீதும், கடைகளின் மீதும். முஸ்லிம்கள் தப்பி பிழைக்க வழியில்லாமல் தீயுடன் கருகி சாம்பல் ஆனார்கள்.
இதுபோல கலவரம் குஜராத்திற்கு புதிதல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து பல கலவரங்களை சந்தித்துள்ளது குஜராத். நாட்டின் எதாவது ஒரு பகுதியில் சின்ன பிரச்னை ஏற்பட்டாலும், உடனே பாதிப்புக்கு உள்ளாவது இந்த குஜராத் தான். இதனால் தான் குஜராத்தை எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கும் பகுதி (Sensitive Area) என்று கூறுவார்கள். காரணம் நாடு பிரிவினையின் போது, பாகிஸ்தானிலிருந்த இந்துக்களை அங்கிருந்த முஸ்லிம்கள் விரட்டியடித்தார்கள். அப்படி விரட்டியடிக்கப்பட்ட இந்துக்கள் குஜராத்தில் தான் தஞ்சம் அடைந்தார்கள் என்று காலங்காலமாக நம்பி வருகின்றனர். இந்த நம்பிக்கையை VHP, பஜ்ரங்தளத்தினர் அடிக்கடி ஊதி பெரிதாக்கி வருகின்றனர். தாங்கள் விரட்டியடிக்கப்பட்டதற்கு இந்த முஸ்லிம்கள் தான் காரணம் என்று தங்கள் ஆத்திரத்தை இந்த அப்பாவி முஸ்லிம்களின் மேல் காட்டுகிறார்கள்.
இவர்கள் முஸ்லிம்களிடம் ஆத்திரத்தை காட்டும் போதெல்லாம், அங்கே ஒரு கலவரம் வெடிக்கும். அப்பாவி முஸ்லிம்கள் அங்கே வெட்டி கூறுபோடப்படுவார்கள். முஸ்லிம் பெண்கள் கதற கதற நடுதெருவில் நிர்வாணப்படுத்தப்பட்டு கும்பல் கும்பலாக கற்பழிக்கப்படுவார்கள். பின்னர் இந்த ரத்தவெறி பிடித்த மிருகங்கள், ஈவு இரக்கமின்றி எரியும் நெருப்பில் முஸ்லிம்களை வீசியெறிந்து அவர்கள் கதறும் காட்சியை கண்டு ரசிப்பார்கள். எதிர்த்து கேட்க யாரும் இல்லாததால் குஜராத்தில் ஆர்எஸ்எஸ், VHP, பஜ்ரங்தளத்தினர் ஒரு ரவுடி ராஜாங்கத்தையே இதுவரை நடத்திவந்துள்ளனர். இப்படி நடந்த கலவரங்களில் முக்கியமானது 1947, 1952, 1959, 1961, 1965, 1967, 1972, 1974, 1980, 1983, 1989, 1990, 1992 கலவரங்கள். இந்த கலவரங்களால் அதிகமாக பாதிப்புக்கு உள்ளானது முஸ்லிம்கள் தான். வீடுகளையும், குருவி போல் சேர்த்து வைத்த சொத்துகளையும் இழந்த இவர்கள் ரயில் தண்டவாளம் அருகே சிறு குடிசைகள் அமைத்து கொண்டு தங்கள் வாழ்வை தொடர்கின்றார்கள்.
Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு
No comments:
Post a Comment