Saturday, July 30, 2005

அழகிகளின் பேஜார் ஷோ

சமீப காலமாக, சென்னை நகரில் "ஃபேஷன் ஷோ" என்ற பெயரில் அழகிகளின் ஆபாச நடனம் அரங்கேறி வருகிறது. புத்தம்புதிய நகைகளை டிசைன் செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் ஜுவல்லரி முதல், உள்ளாடைத் தயாரிப்பாளர்கள் வரை இத்தகைய ஃபேஷன் ஷோக்களை நடத்துவது வாடிக்கையாகி விட்டது.

சென்ற வாரம் சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் மூன்று நாட்களாக நடந்த ஃபேஷன் ஷோவை நேரிலும், மீடியாக்கள் மூலமும் பார்த்தவர்கள், அதிர்ச்சியில் வாயடைத்துப் போனதென்னவோ நிஜம்.

"நிக்சான் இன்ஃபோ மீடியா" என்ற அமைப்பு நடத்திய, அந்த ஃபேஷன் ஷோவில் ரஷ்ய, இத்தாலி மற்றும் வட இந்திய அழகிகள் பலர் ஜட்டி, பிரா மட்டுமே அணிந்து வந்து ஆபாச நடனத்தை ஆடியிருக்கின்றனர்.

வெளிநாட்டு மோகம் கொண்ட இளம் பெண்கள் பயன்படுத்தும் லேட்டஸ்ட் ஜட்டி, பிராக்கள் போன்றவற்றை இந்த மாடல் அழகிகள் அணிந்து வந்ததுடன் நீச்சல் உடையுடனும் உள் அவயவங்கள் தெரியும் விதத்திலான மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தும் பார்வையாளர்களைத் திகைக்க வைத்தனர்.

கலாசார அத்துமீறலாகத் தோன்றிய இத்தகைய நிகழ்ச்சிகள், மேலைநாடுகளில்தான் பரவலாக நடந்துவந்தன. இப்போது மும்பை, டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும் வியாபித்திருக்கும் இந்தச் சீரழிவான போக்கு, இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வக்கிர உணர்வைத் தூண்டிவிடுவதாக, ஒரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

இதுபற்றி பல்வேறு அழகிப் போட்டிகள் மற்றும் ஃபேஷன் ஷோக்களை நடத்திவரும் "விபா" என்ற அமைப்பின் நிறுவனர் ஷோபா நம்மிடம் பேசும்போது,
"பெண்களுக்கான உள்ளாடைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் வேறு எப்படித் தோன்ற முடியும் என்று எனக்குப் புரியவில்லை. முழுக்கமுழுக்க வணிக ரீதியான பிராண்டை, அதுவும் வெளிநாட்டுப் பொருள்களை அறிமுகப்படுத்தும்போது, குறிப்பாக உள்ளாடைகளான ஜட்டி, பிராக்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் சார்பில் தோன்றும் பெண்கள், இப்படித்தானே வரமுடியும்?

இந்த மாதிரி நடப்பது தவறு என்று குரல் கொடுப்பவர்கள், இந்தியப் பொருள்களை மட்டும் உபயோகிப்பவர்களா என்று பார்த்தால், அதுவும் கிடையாது. வெளிநாட்டுப் பொருள்களின் மீது மோகம் கொண்டவர்கள், வெளிநாட்டில் சென்று கல்வியைத் தொடர்பவர்கள், வெளிநாட்டுக்குச் சென்று வருவதையே பெருமையாகப் பேசுபவர்களெல்லாம் கூட்டாகச் சேர்ந்து, வெளிநாட்டு கலாசாரத்தைக் குறைசொல்வது வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

நான் நடத்தும் அழகிப் போட்டியில் ஜெயித்து, உலக நாடுகளிலுள்ள பல்வேறு அழகிகளுடன் போட்டி போட்டு ஜெயிக்க வேண்டுமானால் உடலின் வலிமையை, அழகை, வாளிப்பை நாசூக்காக வெளிப்படுத்தத்தான் வேண்டும். அது விதி. இதற்காகவே நீச்சல் உடையில் அதுவும் டூ பீஸில் சில சமயம் தோற்றமளிக்க வேண்டும். அதை ஆபாசமென்று கொச்சைப்படுத்துபவர்கள், பிற்போக்குவாதிகளாகவும் சுயநலம் படைத்தவர்களாகவும்தான் இருப்பார்கள்.

உலகம் முழுக்க நமது வலிமையும் பெருமையும் தெரிய வேண்டுமானால், இம்மாதிரியான உடைகளையும் அணிந்து காட்சியளித்துத்தான் ஆக வேண்டும். இதில் தவறே கிடையாது.

அந்த வகையில், நந்தம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் இருந்த விஷயத்தில் ஆச்சரியப்பட எதுவுமேயில்லை. எப்போதாவது நடக்கும் இம்மாதிரியான ஷோக்களைப் பார்த்துத்தான் இளைஞர், இளைஞிகள் கெட்டுப் போவார்கள் என்பதும் விதண்டாவாதம்.

இந்த விஷயத்தில் போலீஸ் கமிஷனர் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், "நடவடிக்கை எடுப்போம்" என்றெல்லாம் சொல்வது வியப்பாக இருக்கிறது. இதுபற்றி எங்களைப் போன்ற அமைப்பாளர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, நடவடிக்கை பற்றி முடிவெடுப்பதுதான் ஆரோக்கியமான காரியமாக இருக்கும்"
என்று கூறினார்.

இந்தக் கருத்தை மறுத்து நம்மிடம் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வாசுகி
"உள்ளாடை என்பது உள்ளே அணியும் ஆடையைக் குறிக்கும். அது அந்தரங்கமானதும் கூட. அதனை அவையில் வெளிப்படுத்திக் காட்ட வேண்டியது அவசியமா என்பதை யோசிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஃபேஷன் ஷோக்களில் ஆபாசத்தின் எல்லைகள் தாண்டுவதும் நடக்கக் கூடியதுதான்.

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இன்றைய உலகமய ஸ்டைல் மார்க்கெட்டில், மக்களின் ரசனை உயர வேண்டுமென்பதோ, பக்குவப்பட வேண்டும் என்பதோ நோக்கமல்ல.

ரசனையை எவ்வளவு வக்கிரமாக்கினால் வியாபாரம் உயரும் என்பதே, இதன் நோக்கம். எத்தனை ஆபாசத்தையும் சமூகச் சீரழிவையும் அது நியாயப்படுத்தும்!

எனவே, இந்த மாதிரியான நிகழ்வுகளை முறைப்படுத்துவது தவறல்ல. ஆனால் இதற்கான விதிமுறைகளைப் பெண்கள் அமைப்புகள் மற்றும் இதர ஜனநாயக சமூக அமைப்புகளைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பதுதான் சரியாக இருக்கும். காவல் துறையின் கையில் இது ஒரு ஒடுக்குமுறைக் கருவியாக ஆகிவிடக்கூடாது.

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குப் போகிறவர்களும் வெளிநாட்டுப் பொருள்களை உபயோகிப்பவர்களும், இந்தமாதிரியான ஃபேஷன் ஷோக்களை எதிர்க்கக்கூடாது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை.

தவிர, நம் பெருமையும் வலிமையும் இதுபோன்ற டூபீஸில் தான் இருப்பதாக நினைப்பது, நமது தேசத்தையே அவமானப்படுத்துவதாக இருக்கிறது"
என்று தெரிவித்தார்.

இந்தச் சூழ்நிலையில் இம்மாதிரியான ஆபாச ஃபேஷன் ஷோக்களைத் தடை செய்யவோ, முறைப்படுத்தி கட்டுப்படுத்தவோ வழியிருக்கிறதா என்பதை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நட்ராஜிடம் கேட்டோம்.

"பொதுவாகவே இம்மாதிரியான ஃபேஷன் ஷோக்கள் என்கிற பெயரில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்காணித்து முறைப்படுத்தும் முயற்சியில்தான் இருக்கிறோம்.

உள் அரங்கோ, வெளி அரங்கோ எந்த இடத்தில் கேளிக்கை விழா நடத்தினாலும், காவல்துறையினரிடம் உரிய அனுமதி வாங்க வேண்டும் என்பது சட்டவிதி. ஐம்பது பேருக்கு மேல் கூடி ஒரு நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கக் கூடிய எல்லா நிகழ்வுகளுக்கும் இது போன்ற காவல்துறை அனுமதியைப் பெற வேண்டும்.

நந்தம்பாக்கம் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, பொதுவான கேளிக்கை விழா என்று கூறி அனுமதி வாங்கியிருக்கிறார்கள். அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் அதிகபட்ச ஆபாசங்கள் அரங்கேறியிருப்பதாகப் பத்திரிகைகள் மூலம்தான் நானும் தெரிந்து கொண்டேன்.. இப்போது அதுபற்றி உடனடியாக விசாரித்து அறிக்கை தரச் சொல்லியிருக்கிறேன்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள், "ஆபாசத்தின் எல்லை எது?" என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதற்குச் சட்டத்தில் தெளிவான விளக்கமிருக்கிறது. "காண்போரின் மனதைச் சலனப்படுத்துவதும் கிளர்ச்சியூட்டுவதும் மட்டுமின்றி அருவருப்புடன் முகத்தைச் சுளிக்க வைப்பதும்தான் ஆபாசம்", என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், பலரின் முகத்தைச் சுளிக்க வைக்கக் கூடிய வகையில், சில ஃபேஷன் ஷோக்கள் நடப்பதாகத் தகவல் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதை ஒழுங்கு படுத்தும் நோக்கில், நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரும்போது, முழுமையான நிகழ்வுகளை எழுதி வாங்கிக் கொள்ளவும் திட்டமிருக்கிறது.

தொடர்ந்து ஆபாசத்தை அரங்கேற்றுபவர்களை விரைவில் சட்டத்தின் பிடியில் மாட்டத் தயாராகி விட்டோம்!"
என்று கூறினார் போலீஸ் கமிஷனர் நட்ராஜ்.

-M. குமார்

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 31 ஜுலை, 2005

Friday, July 29, 2005

சிறுபான்மையினருக்கு எதிராக

இந்தியாவில் செயல்படும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் 30,000 அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறுகின்றன. இதில் 16,000 அமைப்புக்கள் ஆண்டிற்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை பெறுகின்றன. இவை மத்திய அரசிற்கு வரவு_செலவைச் சமர்ப்பிக்கின்றன.

இன்னும் 14,000 நிறுவனங்களும் இன்னும் ஓர் ஐந்தாயிரம் கோடி அளவிற்கு நிதியுதவி பெறுகின்றன. ஆனால் எந்தக் கணக்கையும் கொடுப்பதில்லை. யானைக்கு அல்வா, பூனைக்கு பூந்தி வாங்கினோம் என்றுகூட எழுதிக் கொடுப்பதில்லை.

இத்தகைய நிறுவனங்களை வரைமுறைப்படுத்தப் போவதாக மத்திய நிதிஅமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். பார்ப்போம்.

இந்துத்வாவின் தலைமைப் பீடமான ஆர்.எஸ்.எஸ்.கூட தன்னார்வத்தொண்டு நிறுவனமாம். பிரிட்டனில் பதிவு செய்திருக்கிறார்கள். இன்னும் பல சங்பரிவார அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களாம். வேடம் கட்டிக் கொண்டிருக்கின்றன.

உலகையே உலுக்கிவிட்ட குஜராத் பூகம்பம்

கரைதாண்டி வந்த கடல் மாதா ஒரிசாவில் ஏற்படுத்திய பேரழிவு

இந்த இயற்கையின் சீற்றங்களால் இடிந்துபோன மக்களுக்கு பிரிட்டனில் உள்ள ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பு நிதி திரட்டியது. இந்தியாவில் எத்தனை சங்பரிவார அமைப்புகள் உண்டோ அத்தனைக்கும் அங்கே கிளைகள் உண்டு. நாமகரணம் மட்டும் சற்று வேறுபடும்.

இந்த அமைப்புகள் திரட்டிய நிவாரண நிதி, லட்சங்கள் அல்ல. பலப்பல கோடிகள். அத்தனை கோடிகளும் இந்தியா வர பிரிட்டன் அனுமதித்தது. அவ்வளவு பெரிய தொகை இங்கே எப்படிப் பயன்படுத்தப்பட்டது?

ரோஜாத் தோட்டம் போடுவதற்காக இத்தனை கோடி நிதியை சங்பரிவாரங்கள் பயன்படுத்தவில்லை. கள்ளிக்காடுகளை வளர்ப்பதற்குத்தான் பயன்படுத்தின.

இந்து தீவிரவாதம் வளருவதற்கு உரமாகப்பயன்படுத்தப்பட்டன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் தொண்டு நிறுவனங்களின் பணியை ஒரு குழு கண்காணிக்கிறது. அதன் பெயர் அசாவ் (ASAW) என்பதாகும். அந்தக் குழுவினர் இந்தியா வந்தனர். பிரிட்டனில் திரட்டப்பட்ட நிதி இங்கே எப்படிச் செலவு செய்யப்பட்டது என்பதனை ஆராய்ந்தனர். அதிர்ச்சியடைந்தனர்.

'BRITISH CHARITY HINDU EXTREMISM' என்ற தலைப்பில் அந்த அமைப்பினர் 80 பக்க அறிக்கையை பிரிட்டிஷ் மேல்சபையில் சமர்ப்பித்தனர். ஆர்.எஸ்.எஸ்.ஸும் இதர சங்பரிவார அமைப்புக்களும் தொண்டு நிறுவனங்கள் அல்ல. இந்து தீவிரவாத அமைப்புக்கள். எனவே, அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களின் பட்டியலிலிருந்து இவை நீக்கப்பட வேண்டும் என்று லண்டன் நாடாளுமன்றத்தில் குரலெழும்பியது.

தாங்கள் லட்சம் லட்சமாகத் தருகின்ற தொகை, கண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்காகச் செலவிடப்படவில்லை. மதவெறிப் பணிகளுக்குத்தான் பயன்படுகின்றன என்ற விவரம் அங்கே அள்ளிக் கொடுக்கும் மக்களுக்குத் தெரிவதில்லை. காவித்திரைகள் மறைத்து விடுகின்றன.

குஜராத் வகுப்புக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் திரட்டப்பட்ட தொகையில் ஒரு சிறுதுளி கூட அவர்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. இதனை அந்த அசாவ் (ASAW) விழிப்புணர்வு அமைப்பு வெளிப்படுத்தியிருக்கிறது.

குஜராத்தில் மூட்டிவிடப்பட்ட வகுப்புக் கலவரங்களில் இரண்டாயிரம் சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இரண்டு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு அபலைகளாக முகாம்களில் அடைக்கலம் புகுந்தனர்.

இந்தக் கொடூரமான பரிதாப நிலையை ஏற்படுத்தியவர்கள் விஸ்வ ஹிந்து பரிஷத்தினர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் வனவாசி கல்யாண் சமிதியினர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. திரட்டப்பட்ட நிதியெல்லாம் வகுப்பு வெறியைத் தூண்டும் இந்த அமைப்புக்களுக்குத்தான் சமர்ப்பிக்கப்பட்டது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. ஆமாம். சமுதாய தர்மங்களைச் சாகடித்தவர்களுக்கு பணமுடிப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

வசூலித்த கோடிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளுக்குச் சென்றது.

குஜராத், ஒரிசா, மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களின் மலைப் பிரதேசங்களில் ஓராசிரியர் பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். திறந்திருக்கிறது. ஏசுவின் போதனைகளை இப்படித்தான் அந்தக் காலத்தில் பரப்பினார்களாம். அதேபோல ஆர்.எஸ்.எஸ்.ஸும் 'ராம்ராம்' பள்ளிகளைத் திறந்திருக்கிறது.

குஜராத் கலவரத்தின்போது இஸ்லாமிய மக்களைத் தாக்க 'வனவாசி கல்யாண் சமிதி' என்ற மலைவாழ் அமைப்பினரைத்தான் சங்பரிவாரங்கள் பயன்படுத்திக் கொண்டன. அந்தக் கல்யாண் சமிதிகளுக்கு இன்னொரு மூன்றில் ஒரு பகுதிப் பணம் சென்றது.

லோக்கல்யாண் சமிதி, எல்லைப்பகுதி கல்யாண் சமிதி, சேவா பாரதி, உத்கல் (ஒரிசா) பிப்பன்ன சஹாய சமிதி போன்ற அமைப்புகளைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவையெல்லாம் சங்பரிவாரங்களின் தொண்டு நிறுவனங்களாம். இவற்றுக்கு மற்றொரு மூன்றில் ஒரு பகுதித் தொகை பரிமாறப்பட்டிருக்கிறது.

சங்பரிவாரங்களின் வன்முறைப் படைக்குப் பெயர்தான் சேவாபாரதி. இதற்கு மட்டும் ஏறத்தாழ ஐம்பது கோடி ரூபாய் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் புகழ்பரப்புவது, சிறுபான்மை இன மக்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்வது, இந்துக் கோயில்கள் கட்டுவது. சமுதாயத்தின் மேல்தட்டினருக்கு சமூகக்கூடங்கள் கட்டுவது, கிறிஸ்துவ எதிர்ப்புப் பிரசாரம் போன்ற இந்துத்வாப் பணிகளுக்கே நிவாரண நிதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இவர்கள் ஊர் ஊருக்குப் பிள்ளையார் கோயிலிலிருந்து பெருமாள் கோயில் வரை கட்டுவார்கள். உபந்யாசங்கள் நிகழ்த்துவர். விழா நடத்துவர். இத்தகைய இந்து மதப் பிரசாரத்தை அந்த நாட்டு மக்கள் அனுமதிக்க வேண்டும். ஆனால் இங்கே இவர்கள் எந்த மதப்பிரசாரத்தையும் அனுமதிக்க மாட்டார்கள். மாற்று மதத்தினரை துரோகிகள் என்று வசைபாடுவார்கள்.

சங்பரிவாரங்களின் இருட்டறைக் கணக்குகள் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்று தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விழிப்புணர்வுக்குழு தெரிவிக்கிறது. நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு இதனை விட வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும்? அவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தாழ்வாரங்களில் குவிந்து கிடக்கின்றன.

அண்மைக்காலமாக குஜராத்திலும் ஒரிசாவிலும்தான் சங்பரிவாரங்களின் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்தன. நிவாரணநிதி என்று பிரிட்டனில் திரட்டப்பட்ட நிதி, அத்தகைய அநாகரிகக் காரியங்களுக்குப் பயன்பட்டிருக்கின்றன.

லண்டனில் அறநிலைய ஆணையம் என்ற ஓர் அமைப்பு செயல்படுகிறது. குஜராத் நிவாரணநிதி என்று பிரிட்டனில் வசூலிக்கப்பட்ட கோடிகள் எப்படிச் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று நேரில் பார்க்க விரும்பியது. ஆனால் வாஜ்பாய் அரசு அவர்களுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது.

என்றைக்கு வாஜ்பாய் அரசு அமைந்ததோ அன்றிலிருந்து இந்துத்வா தொண்டு நிறுவனங்களுக்கு வந்த உதவிகள் நிறுத்தப்பட்டன. தூய்மையான காந்தீய நிறுவனங்களுக்கு வந்த உதவிகளும் நிறுத்தப்பட்டன. ஆனால் சங்பரிவாரங்களுக்கும், ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கும் அட்டியின்றிக் கோடிகோடியாகக் குவிய வாசல் கதவுகள் அகற்றப்பட்டன.

ராஜஸ்தான் பி.ஜே.பி. அரசு சுனாமி நிதி திரட்டியது. பதினெட்டு கோடி ரூபாய் சேர்ந்தது. அதில் தமிழகத்திற்குப் பங்குதர விரும்பியது. ஆனால் அதனை ஆர்.எஸ்.எஸ். மூலம்தான் செலவிடுவோம் என்றது. அதனைத் தமிழக அரசு ஏற்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ். மூலம் செலவு செய்வதென்றால் தங்களுக்கும் நிதி தேவையில்லை என்று அந்தமான் நிர்வாகமும் அறிவித்துவிட்டது.

சுனாமி நிதியைக்கூட ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் தரவேண்டுமாம். கணக்குக் கேட்க முடியுமா? எப்படிச் செலவு செய்யப்படும் என்று குஜராத்தில் பார்த்து விட்டோம்.

எனவே, வெளிநாடுகளிலிருந்து சங்பரிவாரங்களுக்கு வரும் நிதிக்கு, நிதி அமைச்சர் சிதம்பரம் எப்படிக் கணக்கு கேட்கப் போகிறார்? எப்படி வரைமுறைப்படுத்தப் போகிறார்?

அந்தப் பரிவாரங்களுக்காகத் திரட்டப்படும் நிதி என்னென்ன காரியங்களுக்காக எந்தெந்த அமைப்புக்கள் மூலம் செலவு செய்யப்படுகின்றன என்பதனைப் பார்த்துவிட்டோம். எனவே இந்தியாவைக் கலவரபூமியாக்க வரும் நிதியை அனுமதிக்க வேண்டுமா?

காலத்தோடு செய்ய வேண்டிய காரியம். நிதியமைச்சர் சிதம்பரம் என்ன செய்யப்போகிறார்?

- சோலை
10.07.2005
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Sunday, July 24, 2005

Imrana on video - no rape

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா இம்ரானா? அவரிடமே கேட்டுவிடலாமே.
http://www.milligazette.com/dailyupdate/2005/20050724b.htm

வீடியோ கோப்பை உங்கள் கணினியில் சேமிக்க, வலது சொடுக்கி Save target as என கொடுக்கவும் [in Internet Explorer].
http://www.milligazette.com/dailyupdate/2005/imrana-no-rape-video.wmv

Wednesday, July 20, 2005

இம்ரானா - ஊடகங்களின் பலாத்காரம்

போனமாதம் நடந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஊடகங்களால் கை, கால் வைத்து ஊதி பெரிதாக்கப்பட்டதால் சினிமா படமாகப்போகும் நிலைக்கு தற்போது வந்து நிற்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் முஜாபர்பூர் நகர் அருகில் உள்ள சர்தவால் கிராமத்தைச் சேர்ந்த நூர் இலாஹியின் மனைவி இம்ரானா (வயது 28) கடந்த ஜுன் மாதம் (2005) அவரது சொந்த மாமனார் அலி முஹம்மது என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதே வழக்கு.

தனது கணவர் ஊரில் இல்லாத இரவில் மாமனார் தன் கைகளால் வாயை பொத்தியும் இம்ரானாவின் கைகளை கட்டியும் பாலியல் பலாத்காரம் செய்ததாக இம்ரானாவின் தரப்பு குற்றச்சாட்டு.

ஆரம்பத்தில் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டை மாமனார் முஹம்மது அலியும் அவரின் உறவினர்களும் மறுத்துவிடுகின்றனர். இச்செய்தி அவ்வூரில் பரவுகிறது. நூர் இலாஹியின் உறவினர்களான ஜமீல் மற்றும் ஷா-தீன் ஆகிய இருவரும் அவ்வூரின் மதரசா மவ்லவி முஹம்மது ஷமீம் என்பவரிடம் சாதாரணமாக இவ்விசயத்தை சொல்கிறார்கள். இவர் ஃபத்வா கொடுப்பவரோ அல்லது ஃபத்வா கொடுப்பதற்கு தேவையான விஷய ஞானம் உள்ளவரோ அல்ல. ஷரியத் சட்டம் எதையும் பார்க்காமல் அந்த கணவன் மனைவி பந்தம் ரத்து ஆகிவிடும் என்றும் கற்பழித்தவரே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் எந்த ஒரு ஆதாரத்தையும் முன் வைக்காமல் ஒரு முட்டாள்தனமான கருத்தை சொல்கிறார். இதனைத்தான் ஊடகங்கள் "லோக்கல் ஷரியத் கோர்ட்" என்று வெளியிட்டது.

இம்ரானாவின் செய்தியை அறிந்த உள்ளூர் "தைனிக் ஜாகரன்" என்ற ஹிந்தி பத்திரிகையின் நிருபர் இச்செய்தியை பிரசுரிக்காமல் இருக்க அக்குடும்பத்தினரிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் கேட்கிறார். ஏழை குடும்பத்தினரால் கொடுக்க முடியாததால் அதனை பிரசுரித்துவிடுகிறார். அதனை ஜீ டீ.வி. கொத்திக்கொள்ள அதிலிருந்து மற்ற சானல்கள், பத்திரிகைகள், செய்தி ஏஜன்சிகள் என அவரவருக்கு தேவையான செய்திகளை தடவி பப்ளிசிட்டி செய்து கொண்டன.

மீடியா வழி வந்த இச்செய்தியை முன்வைத்து "ராஷ்ட்ரிய சஹாரா" என்ற உருது பத்திரிகையின் சார்பாக தாருல் உலூம் தேவ்பந்தி நிறுவனத்திடம் மேற்கண்ட விஷயத்திற்கு கருத்து கேட்கப்படுகிறது.

தாருல் உலூம் தேவ்பந்த் என்பது இந்தியாவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்ட ஒரு தீர்ப்பு நிறுவனம் ஒன்றும் அல்ல. பிரிவுகளை கண்டிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஹனஃபி இமாம் கருத்துகளை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படும் ஒரு பிரிவினரின் மதரஸா மட்டுமே அது.

"முன்னர் நடந்துபோன சம்பவங்களைத் தவிர உங்கள் தந்தைகள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரையும் (அவர்கள் இறந்த பின்னர் இனி) நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கக் கூடியதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது." (திருக்குர்ஆன் 4:22) என்ற வசனத்தை மேற்கோள் காட்டி "மாமனாரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் திருமணம் உறவு முறிந்துவிடும் என்று தாருல் உலூம் தேவ்பந்த் கருத்து கூறியுள்ளது.

இது இம்ரானா சார்பாக சொல்லப்பட்ட ஃபத்வா அல்ல என்றும் பொதுவாக கேட்கப்பட்ட கருத்துக்குரியது என்றும் தாருல் உலூம் இதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளது.

அதே தீர்ப்பில் அப்பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியவருக்கே திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று பேசப்படும் கருத்தை பலமாக ஆட்சேபித்து தவறு என்றும் திட்டவட்டமாக சொல்லப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை பொறுத்தவரை ஒரு தீர்ப்பு சொன்னால் அது யாராக இருந்தாலும் அதற்கான இஸ்லாமிய ஆதாரத்தை முன்வைக்க வேண்டும். அதன்படிதான் அத்தீர்ப்பு சரியா? தவறா? என்று உரசி பார்க்கப்படும். இஸ்லாத்திற்கு முரணாக இருக்கும்போது சாதாரண பிரஜைக்கும் இத்தவறை சுட்டிக்காட்ட உரிமை உண்டு.

"பாலியல் வன்புணர்ச்சிக்கு குற்றவியல் சட்டபடி தண்டனை தர வேண்டும். சேர்ந்து வாழ்வது குறித்து அந்தக் கணவன் -மனைவிதான் முடிவு செய்ய வேண்டும். அப்பெண் மீது தவறில்லாத போது அவரை எதற்காக தண்டிக்க வேண்டும்" என்பதாக முஸ்லிம் அல்லாதவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இஸ்லாம் பாலியல் வன் புணர்ச்சி செய்தவரை மரண தண்டனைக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்ட அப்பெண் கணவனுடன் சேர்ந்து வாழ்வதில் எந்த தடையும் விதிக்கவில்லை.

இஸ்லாமிய ஆதாரத்தின் படி

1. கற்பழிக்கப்பட்டப் பெண், கற்பழித்தவனை "இவன்தான் என்னைக் கெடுத்தான்" என்று அடையாளம் காட்டினால் போதும் வேறு சாட்சிகள் தேவையில்லை என்பதை நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். (இது, கற்பழிப்பை நிரூபிக்க நான்கு சாட்சிகள் வேண்டும் என்று சொல்பவர்கள் கவனத்திற்கு)

2. பலவந்தமாகக் கற்பழிக்கப்பட்டப் பெண் குற்றவாளி இல்லை - அதனால் அவளுக்கு தண்டனை கிடையாது.

3. கற்பழித்தவனுக்கே மரண தண்டனை.

4. "அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவளைக் கெடுத்தவன்" என்று உண்மையை ஓப்புப் கொண்டு முன் வந்தவருக்கே கற்பழிக்கப்பட்டப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கவில்லை!

இனி இம்ரானாவின் விஷயத்துக்கு வருவோம்.

"உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளாதீர்கள்" (திருக்குர்ஆன், 4:23)

மகனின் மனைவி அதாவது மருமகளை, மகன் இறந்து விட்டால் அல்லது மகன் மனைவியை விவாகரத்துச் செய்தால் கூட அந்தப் பெண்ணை அவருடைய தந்தைத் திருமணம் செய்யக்கூடாது என்று 4:23ம் வசனம் தடை விதிக்கிறது. திருமணம் செய்துகொள்ள விலக்கப்பட்ட, தன் மகனின் மனைவியை திருமண உறவையும் கடந்து பலாத்காரம் செய்தது கீழ்த்தரமான செயல் -இச்செயலுக்கு மகனின் மனைவியை கற்பழித்தத் தந்தைக்கே மணமுடிப்பது குற்றவாளிக்கு பரிசளிப்பது போன்றதாகும்.

கற்பழித்தவன்தான் குற்றவாளி, கற்பழிக்கப்பட்டப் பெண் நிரபராதி - அவள் தவறுக்கு உடன்படவில்லை - நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் "நீ செல்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்" என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லியிருப்பது பலவந்தப்படுத்தப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது. மேலும் திருக்குர்ஆன் நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் மீது குற்றமில்லை (5:3) என்று கூறுகிறது.

இம்ரானா குற்றமற்றவர் என்பதால் அவர் தன் கணவரோடு சேர்ந்து வாழ்வதற்கு இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை. இம்ரானா தன் கணவரோடு சேர்ந்து வாழலாம் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

ஒரு ஏழை குடும்பத்தில் நடந்த ஒரு சொத்து தகராறு, உள்ளூர்வாதிகளால் கண், காது, மூக்கு வைத்து பேசப்பட்டு பிறகு விவகாரம், ஊடகங்களால் சரியாக விசாரிக்காமல் ஊதி பெரிதாக்கி விட்டன.

சம்பவம் நடந்தது ஜுன் 3-ந்தேதி. செய்தி திரிக்கப்பட்டு - ஜோடிக்கப்பட்டு வெளியே வந்தபிறகு சம்பந்தப்படாதவர்கள் 15-ந் தேதிதான் லோக்கல் மவ்லவியிடம் சாதாரணமாக கருத்து கேட்டிருக்கிறார்கள். அதன் மறுநாள் 16-ந்தேதி காவலர்களால் கைது செய்யப்படுகிறார். இதன் பிறகே இம்ரானா காவல் நிலையம் கேட்டுக்கொண்டதற்கிணங்க புகார் பதிவு செய்கிறார். சம்பவம் நடந்து சுமார் 2 வாரம் கழித்துதான் புகார் பதிவு செய்யப்படுகிறது. ஜுன் 20-ந்தேதி இம்ரானா முஜஃபர் நகர் கோர்ட்டில் ஆஜராகிறார்.

இதற்கு பின்னணியில் இருப்பது வீட்டை விற்பது சம்பந்தமாக நூர் இலாஹிக்கும் அவரின் தந்தை அலி முஹம்மதுக்கும் நடந்த பிரச்சினையாகும். அலி முஹம்மது 20 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க வீட்டை விற்க முற்படுகிறார். ஆனால் நூர் இலாஹியும் அவரது மனைவி இம்ரானாவும் இதனை எதிர்க்கிறார்கள். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்கள் முன்பாக விஷம் குடித்து தற்கொலை செய்ய முற்பட்டு தோற்றுவிடுகிறார். பிறகுதான் இத்தகைய குற்றாச்சாட்டு இம்ரானாவினால் வைக்கப்படுகிறது.

59 வயது பெரியவர் ஒரு இளவயது பெண்ணை வீட்டில் பெரியவர்கள் இருக்கும்போது கற்பழிக்க முடியுமா என்பதுதான் இங்கு கேள்வி. அலி முஹம்மதுவின் மனைவியாகிய மூதாட்டி தன் கணவரால் இத்தகைய செயலை செய்யமுடியாது என்று கண் கலங்குகிறார். நூர் இலாஹியிடம் உங்களின் தாய் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்கிறாரே அவரை நம்புகிறீர்களா? என்று கேட்ட போது, ஆமாம் அவரின் பேச்சை நம்புகிறேன் என்கிறார். உங்கள் தந்தை இத்தகைய செயலை செய்யமுடியுமா? என்று கேட்டதற்கு அவ்வாறு செய்ய முடியாது என்கிறார். இது பலரின் முன்னிலையில் இம்ரானாவின் சகோதரர்கள் இருவரும் அங்கு இருந்தும் இந்த பதிலை நூர் இலாஹி சொல்கிறார். இம்ரானாவும் தான் எந்த ஃபத்வாவையும் கேட்கவில்லை என்று மறுத்துவிடுகிறார்.

இம்ரானா தரப்பு குற்றச்சாட்டு தவிர இம்ரானாவுக்கு சாதகமான எந்த ஆதாரமும் இல்லை என்றும் இது ஒரு சொத்து தகராறு என்கிறது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மற்றும் தி ஹிந்து. மாமனாரின் சொத்துக்களை அபகரிக்க மகனும் மருமகளும் நடத்திய நாடகம் என்பதும் மற்றவர்களின் வாதம். இம்ரானாவின் வயது 28, அவரது மாமனாரின் வயது 59. இம்ரானா கற்பழிக்கப்படும்போது முரண்டுபிடித்து அழுதிருந்தாலும் 100 சதுர அடிமட்டுமே உள்ள அவ்வீட்டில் 5 பெரியவர்களும் 7 குழந்தைகளுக்கும் கேட்டிருக்குமே என்பதுதான் இம்ரானாவிற்கு எதிரான நிலை. அலி முஹம்மது துப்பாக்கியை காட்டி மிரட்டினார் என்ற ஒரு செய்தியும் அவரை கைது செய்யும்போது எந்த துப்பாக்கியையும் போலிசார் பறிமுதல் செய்யவில்லை என்பதிலிருந்து பொய்யாகி விடுகிறது.

இந்நிகழ்ச்சியை இஸ்லாத்தை எதிர்ப்பவர்களும் இந்தியாவின் காவி இயக்கங்களும் இஸ்லாத்திற்கெதிரான ஆயுதமாக கையில் எடுத்துள்ளன. அத்வானி, அருண்ஜேட்லி முதல் அசோக் சிங்கால் வரை பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் முஸ்லிம் தனியார் சட்டத்தை தூக்கி எறிய வேண்டும் என்று கதற ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒரு பெண்ணுரிமை இயக்கம் இம்ரானாவிற்கு 5 ஆயிரம் ரூபாய் பேரத்திற்கு "தான் முஸ்லிம் தனியார் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை" என்றும் "சிவில் கோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்" என்றும் சொல்லுமாறு கேட்டுள்ளார்கள்.

இஸ்லாத்தினை வேரறுக்க இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்கள் கீழ்கண்ட வழிகளை கையாளுவது உண்டு.

1) முஸ்லிம்கள் எங்கு தவறு செய்தாலும் அதனை ஊடகங்களில் பதியவைப்பது.

2) அவ்வாறு முஸ்லிம்கள் தவறு செய்யவில்லை என்றால் அதற்கு சாதகமான சம்பவங்களின் வழியே முஸ்லிம்கள் தவறு செய்திருக்கலாம் (suspection) என்று பிரச்சாரம் செய்து ஊடகங்களில் பதிய வைத்துவிடுவது.
3) இத்தகைய விஷயங்கள் இஸ்லாத்திற்கெதிரானது என்று ஆதாரங்களைக்காட்டி சொன்னால் கூட, அதனை காதில் போட்டுக்கொள்ளாமல் இச்சம்பவங்களை இஸ்லாத்தின் வழிமுறையாக பிரச்சாரம் செய்வது.
4) பதிய வைத்த செய்திகளுக்கு எதிரான உண்மை சம்பவங்கள் தலை தூக்குமானால், பிறிதொரு காலத்தில் பதிய வைத்த இச்செய்தியை இஸ்லாத்தின் அசிங்கங்களாக பிரச்சாரம் செய்வது.

5) இந்தியாவை பொறுத்தவரை இதுபோன்ற சம்பவங்கள் தலைதூக்கும்போதெல்லாம் "பொது சிவில் சட்டம் தேவை" என்று கூப்பாடு போடுவது காவி இயக்கங்களின் வழிமுறையாகும்.

இந்த தீர்ப்பு தவறானது என்று இஸ்லாமிய இயக்கங்களால் பிரச்சாரம் செய்யப்பட்டாலும் இச்செய்தியை ஆறப்போட்டு சில வருடங்கள் சென்று "முட்டாள்தனமான இஸ்லாத்தின் தீர்ப்பு" என்று இஸ்லாத்தின் மீது சேறுவாறி இறைக்க இச்சம்பவத்தை பயன்படுத்துவார்கள். எதிர்காலத்தில் வெறும் வாய்களுக்கு அவல் கிடைத்த மாதிரி தவறான ஊடக வழிச் செய்திகளை வைத்து நடக்காத ஒன்று நடந்ததாக சொல்ல நல்லதொரு வாய்ப்பு. இதுவே நிகழ்கால இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்களின் மூலம் நமக்கு கிடைக்கும் படிப்பினையாகும்.


"கணவன் மனைவியும்" சேர்ந்து வாழக்கூடாது என்று தாருல் உலூம் சொன்ன முட்டாள்தனமான கருத்து, முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களால் உலகஅளவில் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. (இதற்கான பல ஆதாரங்களை நம்மால் எடுத்து வைக்க முடியும்). மத்ஹப் போன்ற பிரிவுகளை எதிர்க்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு மத்ஹபின் பெயரால் நடந்த நிகழ்கால தடுமாற்றத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல நல்லதொரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.


"இஸ்லாம்" தொடர்ந்து ஊடகத்தினால் தாக்கப்படுவதால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமான முஸ்லிம்களின் ஊடகங்களில் "கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதற்கு தடை இல்லை" என்ற கருத்தை வலியிறுத்தினர். மற்றபடி இத்தகைய கற்பழிப்பு நடந்ததா என்ற செய்தியோ அல்லது இதற்கு பின்னணியில் உள்ள செய்தியோ முன்னுரிமை அளிக்கப்படவில்லை. குறிப்பிட்ட பத்திரிக்கைகளைத் தவிர.

1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறியாமைகளை போக்கிய ஒரு மார்க்கத்தின் பெயரால் இத்தகைய அசிங்கங்கள் நடப்பதுதான் கேலிக்கூத்தாக இருக்கிறது.

பிரிக்கப்படாத கணவன் மனைவியை சேர்ந்து வாழ்வதற்காக பல பெண்ணுரிமை இயக்கங்கள் போராட்டம் நடத்துகின்றன. தீர்ப்பு கூறும் அவையிடம் இந்த விவகாரம் முறையாக எடுத்துச் செல்லப்படவும் இல்லை. சம்பந்தப்பட்டவர் கேட்காத ஃபத்வா-வை சம்பந்தப்படுத்தி ஊடகங்களும் காவி இயக்கங்களும் அரசியல் நடத்துகின்றன.

இம்ரானா தனது மாமனாரால் பலாத்காரம் செய்யப்பட்டாரோ இல்லையோ ஆனால் ஊடகங்கள் அப்பணியைச் செய்து கொண்டிருக்கின்றன.



References:
http://www.milligazette.com/dailyupdate/2005/20050714b.htm
Also read:
Muslim Political Council's report on the Imrana episode
Text of the Question and fatwa on Imrana
Statements on Imrana case
"Deoband Fatwa"

islamonline.org
arabnews

http://www.expressindia.com/fullstory.php?newsid=49943
http://www.hindu.com/thehindu/holnus/001200507031202.htm

http://abumuhai.blogspot.com/2005/06/blog-post_30.html
http://athusari.blogspot.com/2005/07/blog-post_06.html

http://timesofindia.indiatimes.com/articleshow/1158204.cms
http://www.expressindia.com/fullstory.php?newsid=5042

Thursday, July 07, 2005

நான்தான் உங்கப்பன்டா..

உலகத்தில் நாட்டுக்கு நாடு, மனிதனுக்கு மனிதன் என்று எவராக இருந்தாலும் போட்டி போட்டுக்கொண்டு "உனக்கு அப்பன் நானடா" என்று முன்னேறி வருகிறார்கள். இந்த முன்னேற்றம் மனித வாழ்க்கையை உயர்த்துமானால் அது அவசியமான முன்னேற்றம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பகட்டுக்காகவும், பெருமைக்காகவும்தான் எனும்போது சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.

இவர்களின் முன்னேற்றம் யார் "அதிக நேரம் முத்தம் கொடுப்பது" என்பதிலும், பாம்பு பல்லி போன்ற விஷ ஜந்துக்களை கடித்து விழுங்குவதிலும், உடைந்த பிளேடுகள், கிளாஸ் தூள்கள் திண்பதிலும் என்று தொடர்கிறது. இந்த போட்டா போட்டிகள் கடுமையான பயிற்சி மேற்கோண்டு செய்யும்போது பணம் இருப்பவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா?

வளர்ப்பு மகனின் திருமணமாகட்டும், இங்கிலாந்து ராணிகளின் திருமணமாகட்டும் அல்லது அரபு ஷேக்குகளின் ஆடம்பர திருமணமாகட்டும் - ஏற்கனவே இருக்கும் ரிக்கார்டுகளை உடைக்கக்கூடிய அளவுக்கு ஆடம்பரங்களை புதிது புதிதாக கண்டுபிடிக்கிறார்கள்.

முன்னால் உலகப்பணக்காரர்களில் முதன்மையானவரும் இந்நாள் உலக பணக்காரர்களில் ஒருவருமான புருணை சுல்தான் சுமார் 100 மில்லியன் டாலருக்கு போயிங் கம்பெனியிலிருந்து வாங்கிய விமானத்தை அப்படியே வாகோ-வுக்கு அனுப்பி மேலும் 120 மில்லியன் டாலர்களை செலவிட்டு அலங்கரித்துள்ளார். இந்த சொகுசு விமானத்தில் கை அலம்பும் தொட்டி கூட முழுமையான தங்கத்தினால் ஆனது. அதிலும் ஒன்று லாலிக் படிகத்தினால் (Lalique Crystal) செய்யப்பட்டது. மீத விஷயங்களை படங்களைப் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.