Sunday, October 09, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 10

கலவரங்கள் நடந்த அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம் பெண்களே குறிவைக்கப்பட்டார்கள் என்பதை நாம் மறந்துவிட கூடாது. இந்த கோரதான்டவம் ஆடுவதற்காக 15, 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கிராமங்களிலிருந்து மதவெறியர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இந்த கலவரத்தின் போதுதான் முதல் முதலாக இப்படி கொலையாளிகளை ஒரேயடியாக வெளிக்கிராமங்களிலிருந்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார் பான்சமஹால் என்ற மாவட்ட காவல்துறை துணைக்கண்காணிப்பாளர்.

இப்படி திரட்டப்பட்ட கொலையாளிகள் ஒருவர் அல்ல ஒரு நூறு பேர் அல்ல ஓராயிரம் பேர் அல்ல 12 லட்சம் பேர் இந்த கலவரத்தில் கலந்து கொண்டார்கள். வந்தவர்கள் வெறும் கையுடனும் வரவில்லை. அரிவாள், வீச்சு, சூலம், துப்பாக்கி, கேஸ் சிலிண்டர், பெட்ரோல், வெடிபொருட்கள் இப்படி அனைத்து தயாரிப்புடனும் வந்து காரியத்தை கட்சிதமாக முடித்துவிட்டு சென்றார்கள்.

இவர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் மத்திய மாநில அரசுகள் கொடுத்தது. கலவரக்காரர்களுக்கு ரூ.500 தின கூலி, உணவு மற்றும் மது. இவர்கள் இறந்தால் 2 லட்சம் பணம். கைதானால் அனைத்து செலவும் VHP ஏற்கும். இப்படியாக அவர்கள் முஸ்லிம்கள் மீது பிரகடனப்படுத்தாத ஒரு போரையே தொடுத்தார்கள். எவ்வித தயாரிப்பும் இல்லாத அந்த முஸ்லிம்களுக்கு சாவதை தவிர வேறு வழியில்லாமல் போனது.

தன்னை பெற்றெடுத்த பெற்றோர், பாசத்துடன் வளர்த்து வந்த பிள்ளைகள், தன் சகோதர, சகோதரிகள், தன் மனைவி, உற்றார், உறவினர், சொத்து, சுகம் அனைத்து விட்டுவிட்டு நாளை நாம் மரணிக்க போகிறோம் என்று இந்த முஸ்லிம்கள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. கயவர்கள் வந்தார்கள். கையில் கிடைத்ததை சுருட்டினார்கள். முஸ்லிம்களை துண்டாடி குவியலாக்கினார்கள். கேஸ் அடித்து கொன்றார்கள். சென்றார்கள் அடுத்த வீடுகளை நோக்கி.

இப்படியாக பெற்றோர்களையும், உற்றார்களையும் இடிந்து தவிப்பவர்களில் ஜாவிதும் ஒருவன். இவனுக்கு வயது 11. குடும்பத்தில் உள்ள அனைவரையும் இடிந்து தனிமரமாக நின்று கொண்டிருக்கிறான் இன்று. ஜாவிதின் தந்தையையும், தாயையும் மற்றும் சகோதரியையும் உயிருடன் எரித்து கொன்றார்கள். மேலும் ஜாவிதின் ஒன்று விட்ட அண்ணனையும் கொன்றார்கள், அவரின் மனைவியையும், சகோதரியையும் கற்பழித்து கொன்றார்கள். இன்று இவன் அகமதாபாத்தில் உள்ள ஷா ஆலம் தர்கா அகதிகள் முகாமில் இருக்கிறான்.

மதவெறி பிடித்த மிருகங்களின் செயல்களை கண்ணால் கண்ட ஜாவித், நடந்ததை மறக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறான். ஜாவிதுக்கு ஆறுதல் கூற இன்று யாருமில்லை. பாசம் காட்டி வந்த பெற்றோர்கள் எரிந்து சாம்பலாகிவிட்டனர். உறவினர் என்று சொல்லி கொள்வதற்கும் யாருமில்லை. அவர்களையும் கொன்று விட்டனர். என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் ஜாவிதின் வாழ்க்கை. இப்படி நூற்று கணக்கான ஜாவித்கள் இன்று குஜராத்தில். பாசிஸ்ட்டுகளின் கொலை வெறியாட்டத்தால் நாளை நம் பிள்ளைகளும் ஜாவித் ஆக மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை இந்தியாவில். முஸ்லிம்களை வேரறுப்பதே பாசிஸ்ட்டுகளின் வாழ்க்கை இலட்சியம்.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

No comments: