Wednesday, October 19, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 11

குஜராத்தில் ஒரு பகுதியான ரந்திக்பூரில் பல்கீஸ் யாகூப் படேல் என்றொரு பெண். மிகவும் மோசமாக பாதிக்கபட்டவர்களில் ஒருவர். இவருக்கு நடந்ததை கேட்டால் கண்களிலிருந்து ரத்தகண்ணீர் வடிக்காதவர் எவரும் இருக்கமாட்டார். ஐந்து மாத கர்பிணியான இவருக்கு 20 வயது. மரணத்தின் வாயிலுக்குள் தலையை விட்டு மீண்டு வந்தவர்.

முஸ்லிம்களை கொலை செய்ய வந்தவர்களுக்கு, ஆணென்ன, பெண்ணென்ன, குழந்தை என்ன, கர்ப்பிணி என்றால் இவர்களுக்கு என்ன? முஸ்லிமாக பிறந்தால் இந்த நாட்டில் வாழ உரிமையில்லை. மண்ணுக்குள்ளோ அல்லது பூமிக்கு மேலோ ஏதோ ஒரு இடத்தில் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
பல்கீஸை கொல்ல வந்த 3 பேரும் அவள் 5 மாத கர்ப்பிணியா? நிறைமாத கர்ப்பிணி என்றெல்லாம் அலட்டி கொள்ளவில்லை. வந்தார்கள். பல்கீஸை நிர்வாணப்படுத்தினார்கள். தானும் நிர்வாணமானார்கள். அவளை கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் கடுமையாக அடித்தார்கள். இவர்கள் மூவரும் பல்கீஸின் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்.

பல்கீஸை போல அவளின் உறவினரும், இந்தியாவில் பிறந்ததற்காக இதே பரிசை பெற்றனர். அவர்களில் பல்கீஸின் சகோதரி சமீம், ஆமினா ஆதம், ஹலிமா, முன்னிபென் அப்துல் மற்றும் மதீனா ஆகியோரும் பாசிஸ வெறியர்களால் கற்பழிக்கபட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் 9 வயதே ஆன முன்னிபென் அப்துலையும் விட்டு வைக்கவில்லை. 45 வயதான ஹலிமாவையும் விட்டுவைக்கவில்லை. அவர்களையும் கற்பழித்தே கொன்றனர். பாசிஸ்ட்டுகளுக்கு வயதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. காட்டு மிருகங்களே பார்த்து வெட்கப்படும் அளவுக்கு இவர்கள் காட்டுமிராண்டிகள் போல நடந்து கொண்டார்கள்.

இதெல்லாவற்றையும் விட வேதனையையும், ஆத்திரத்தையும் தூண்டும் ஒரு சம்பவம் ஒன்று நடந்தது. பல்கீஸின் சகோதரி சமீம் குழந்தை ஈன்றெடுத்து இரண்டு நாள் தான் ஆகிறது. பாசிஸ கும்பலிடமிருந்து தப்பி பிழைக்க அந்த குழந்தையும் தூக்கி கொண்டு ஓடும் போது, நெங்சில் ஈரம் இல்லாதவர்கள் அவளை வழி மறித்து இரண்டு நாளே ஆன அந்த குழந்தையை எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்தனர். தன் பச்சிளம் குழந்தை சூடு தாங்க முடியாமல் கதறியதை கண்டு, பாவம் சமீம் துடியாய் துடித்தாள். கதறி அழுதாள். இரக்கமில்லாத பாசிஸ வெறியர்கள் இத்துடன் விடவில்லை. குழந்தை பெற்று இரண்டு நாளே ஆன அவளை தொடர்ந்து கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் கடுமையாக சித்ரவதை செய்து கொன்றேவிட்டார்கள் ஈனர்கள்.
அங்கே ஒவ்வொரு பெண்ணுக்கும் இதுவே நடந்தது. கொலை வெறிபிடித்த கயவர்கள் தன் ரத்த பசியை தீர்த்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.

பல்கீஸ் மயங்கி கிடப்பதை இவர்கள் கவனிக்கவில்லை. அவளும் இறந்து விட்டதாக எண்ணி கிளம்பிவிட்டார்கள். தனக்கு சுய நினைவு வந்தபோது தான் தெரிந்தது நிர்வாணமாக நடு ரோட்டில் நாம் கிடக்கிறோம் என்று.

கணவனை இழந்து, இரண்டு வயது பிள்ளையை இழந்து, மானத்தை இழந்து, அவமானப்பட்டு கூனி குருகி போய் இருக்கும் பல்கீஸ்க்கு கண்ணீரும், வயிற்றில் வளரும் குழந்தையுமே ஆறுதல்.

பல்கீஸை கற்பழித்து அவமானப்படுத்திய இந்து வெறியர்கள் வேறு யாருமில்லை. அக்கம் பக்கத்து வீட்டு இந்துக்கள். சகோதர வாஞ்சையுடன் பழகிவந்தவர்கள். அவர்களுகென்று ஒரு நேரம் குறிப்பிடப்படும் போது, தன் புத்தியை காட்டிவிடுகிறார்கள். இப்படி எத்தனையோ சம்பவங்கள் இந்தியா முழுதும் நடந்திருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால், 'முஸ்லிம்களிடம் அன்யோன்யமாக பழகி அவர்களின் கழுத்தை அறுங்கள்' என்ற ஆர்.எஸ்.எஸின் மறைமுக செயல்திட்டமே விடையாக வந்து நிற்கிறது. பல்கீஸை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களில் 23 வெறியர்களை பெயர் சொல்லி குறிப்பிட்டிருந்தார்.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

No comments: