ஒடுக்கப்பட்டோருடன் இணை, ஓட்டுக மதவெறி
Previous Posts

Archives

Links
எழுதுகோல் ஆயுதம்
Wednesday, June 28, 2006

குஜராத் படுகொலை: ஆவணப்படம் (Video)

The Final Solution - குஜராத் படுகொலை: ஆவணப்படம்



வீடியோ இயங்கவில்லையென்றால் இங்கு சொடுக்கவும்.

தொடர்புடைய சுட்டிகள் :

குஜராத்: மறைக்கப்படாத இறுதித்தீர்வுகள்


குஜராத் தொடர்பான எனது முந்தைய பதிவுகள்


http://dystocia.blogspot.com/2005/03/blog-post_23.html

BBC

Awards Won

- Wolfgang Staudte award & Special Jury Award (Netpac), Berlin International film festival (2004)
- Humanitarian Award for Outstanding Documentary, HongKong International film festival (2004)
- Montgolfiere d'Or (Best Documentary) & Le Prix Fip/Pil' du Public (Audience award), Festival des 3 Continents at Nantes (France; 2004)
- Best Film, Freedom of Expression awards by Index on Censorship (UK; 2005)
- Silver Dhow, Zanzibar International film festival (2004)
- Best documentary, Big MiniDV (USA; 2004)Special Jury Award, Karafest (Karachi; 2004)
- Special Jury Award, Film South Asia (Kathmandu; 2005)
- Human Rights Award, Docupolis (Barcelona; 2005)
- Special Jury Mention, Munich Dokfest (2004)
- Special Jury Mention, Bangkok International filmfest (2005)
- Nominee, Best Foreign Film, Grierson Awards (UK; 2004)
- Best Documentary/Short Film, Apsara Awards(India;2006)
- Special Award by NRIs for a Secular and Harmonious India (NRI-SAHI), NY-NJ, USA (2004)
- Special Award by AFMI, USA-Canada (2004)
- Special Jury Award, Worldfest 2005 (Houston)
- Special Jury Award, Mar Del Plata Independent film festival (2005; Argentina)

(இப்பதிவில் இடப்படும் மறுமொழிகள் மட்டுறுத்தலுக்கு (Moderation) உட்படுத்தப்படுகின்றன. எனவே, தலைப்பிற்கு சம்மந்தமில்லாதவை மற்றும் திசை திருப்பல்கள் என்று நான் புரிந்துக்கொள்ளும் மறுமொழிகள் அனுமதிக்கப்படாமல் போகலாம்)
Tuesday, June 27, 2006

இந்து பயங்கரவாதிகளின் தண்டனை ரத்து

கோவையில் நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் 4 பேர் கொலை
11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து


சென்னை, ஜுன் 28,

கோவையில் நடைபெற்ற கலவரத்தில் முஸ்லிம்கள் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

கோவை கலவரம்

கோவை போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ். இவர் 29.11.97 அன்று கொலைச் செய்யப்பட்டார். இதனால், அப்பகுதியில் இனக்கலவரங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து முஸ்லிம் வகுப்பை சேர்ந்தவர்களை சிலர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர்.

செல்வராஜ் கொலை செய்யப்பட்ட மறுநாள் கோவைஅரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் கலவரம் ஏற்பட்டது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நின்றிருந்த கும்பலை சேர்ந்த பலர் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியும், தீவைத்தும் எரித்தனர். அந்த பரபரப்பான சூழ்நிலையின்போது உக்கடத்தில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்ததாக சிலர் ஒரு வேனில் கொண்டுவரப்பட்டனர். அந்த வேனை பார்த்த கலவர கும்பல் நேராக அந்த வேனுக்கு சென்று வேனில் இருந்த அபீப் ரகுமான் என்பவரை கத்தியால் குத்தியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

4 பேர் படுகொலை

பின்னர் வேனில் இருந்த ஆரிஸ் என்பவரை இழுத்துப்போட்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் உயிரோடு பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது. இதில் அவரும் இறந்தார். சற்று நேரத்தில் உக்கடம் கலவரத்தில் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அயூப்கான் என்பவரை பார்ப்பதற்காக அவருடைய தம்பி ஆரிப்பும், சுல்தானும் ஒரு ஸ்கூட்டரில் வந்தனர். அவர்கள் கூட்டத்தினரை பார்த்ததும் அரசு ஆஸ்பத்திரி வாசலிலேயே ஸ்கூட்டரை போட்டுவிட்டு ஓடினார்கள். ஆனால் வன்முறை கும்பல் அவர்களை விரட்டியது. இதில் ஆரிப்பை துரத்தி அடித்து கொன்றனர்.

சுல்தான் காயத்துடன் தப்பிவிட்டார். மேலும் லியாகத் அலிகான் என்பவர் காயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு வந்தபோது அவரை ஆஸ்பத்திரியின் கேட்டிலேயே வன்முறை கும்பல் தடியால் அடித்துக்கொன்றது. இந்த கலவரத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் அபீப் ரகுமான், ஆரிஸ், ஆரிப், லியாகத் அலிகான் ஆகிய 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 30.11.97 அன்று நடந்தது.

11 பேருக்கு ஆயுள் தண்டனை

இது தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கோவை 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி எம்.பூபாலன் இந்த வழக்கை விசாரித்தார்.

பிரபாகரன், மகேஸ்வரன், விவேகானந்தன், உமாசங்கர், நாராயணன், குமரன், குருநாதன், மணிகண்டன், சீனிவாசன், மாணிக்கம், நாகராஜ் ஆகிய 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ëப்பு வழங்கினார்.

சி.எஸ்.ராஜு, சம்பத், ஆனந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பு 18.8.2000 அன்று கூறப்பட்டது.

ஐகோர்ட்டு தீர்ப்பு

11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை எதிர்த்து 11 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் எம்.கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.

11 பேர் மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிபதிகள் ரத்து செய்தனர். இந்த வழக்கில் இருந்து 11 பேரையும் விடுதலை செய்தனர்.

நன்றி: தினத்தந்தி

(இப்பதிவில் இடப்படும் மறுமொழிகள் மட்டுறுத்தலுக்கு (Moderation) உட்படுத்தப்படுகின்றன. எனவே, தலைப்பிற்கு சம்மந்தமில்லாதவை மற்றும் திசை திருப்பல்கள் என்று நான் புரிந்துக்கொள்ளும் மறுமொழிகள் அனுமதிக்கப்படாமல் போகலாம்)

Powered for Blogger by Blogger templates