Thursday, October 06, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 9

பாத்திமா பீவி முஹம்மத் யாகூப் ஷேக் என்றொரு பெண். இவர் தன் குடும்பத்தை சேர்ந்த 19 பேரை ரத்த வெறிபிடித்த பாசிஸ பேய்களுக்கு இறையாக்கிவிட்டு பரிதவித்து நின்ற பெண்களில் ஒருவர். நம் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனாலே நம்மால் தாங்கி கொள்ளமுடியவில்லை. பாவம் இந்த பாத்திமா பீவி 19 பேரை பறிகொடுத்துவிட்டு படும் வேதனை.

இவர் கூறுகிறார், இந்த பாசிஸ வெறியர்களின் எல்லா காட்டுமிராண்டி தனங்களையும் மன்னித்துவிட முடியும். ஆனால் இவர்கள் நம் பெண்களிடம் நடந்து கொண்ட விதம் மன்னிக்கவே முடியாது என்று கூறுகிறார். அந்த அளவுக்கு நம் பெண்களிடம் மிக கொடூரமாக நடந்துகொண்டார்கள் காட்டுமிராண்டிகள்.

நரோடா பாடியா என்பது இவர் வசித்து கொண்டிருந்த இடத்தின் பெயர். இங்கு தான் 90 முஸ்லிம்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்கள். அவர்கள் காவல்துறையினரிடம் தங்களை காப்பாற்றும் படி வேண்டினார்கள், கெஞ்சினார்கள், கதறினார்கள், உயிர்பிச்சை கேட்டார்கள். இவர்களை பாதுகாக்க வேண்டிய அந்த காவல்துறையினர், காப்பாற்றுவதற்கு பதிலாக அறிவுரை கூறினார்கள். உங்களை காப்பாற்ற முடியாது. நீங்கள் அனைவரும் உங்களை கொலைகார கும்பலிடமே ஒப்படைத்துவிடுங்கள் என்று கூறினார்கள். இதை சொல்வதற்காகவா இவர்கள் நம் வரி பணத்தில் உடம்பை வளர்க்கிறார்கள்? தப்பிப்பதற்கு வேறு வழியில்லாத முஸ்லிம்கள் பாசிஸ்ட்டுகளின் கைகளால் உயிருடன் எரிந்தார்கள்.

அந்த கிராமத்திலிருந்து தப்பித்துகொள்ள பாத்திமா ஷேக் குடும்பத்தினருடன் முயற்சி செய்து கொண்டிருந்த போது, பாசிஸ்ட்டுகளின் கைகளில் அகப்பட்டு கொண்டார்கள் அனைவரும்.

இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தன்னுடன் கொண்டுவந்த ரூ.20,000 பணத்தை எடுத்து கொடுத்து, தங்களை விட்டுவிடும்படி கெஞ்சினார் பாத்திமா ஷேக்கின் சகோதரி. அந்த வெறிபிடித்த கூட்டம் அவரிடமிருந்து பணத்தையும் பறித்து கொண்டதோடு மட்டுமல்லாமல், ஒருவர் பின் ஒருவராக அந்த சகோதரியை கற்பழித்தனர். பாவம் அந்த சகோதரி தன்னை விட்டுவிடும்படி கத்தியும், கெஞ்சியும் எந்த பயனும் இல்லை. அவரை கந்தலாக்கிவிட்டு பின்னர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார். இதையே பாத்திமா ஷேக்கின் சகோதரி மகளுக்கும் நடந்தது. நடு ரோட்டில் அவர்கள் அசிங்கப் படுத்தப்பட்டார்கள். இவை அனைத்தையும் தன் கண்ணால் கண்ட இந்த பாத்திமா தன்னுடைய அழுகையை அடக்கமுடியாமல் தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தார்.

மேலும் பாத்திமா கூறுகிறார் தன் சகோதரியும், சகோதரியின் மகளும் மட்டும் இந்த கொடுமைக்கு ஆளாகவில்லை. குறைந்தது 25 பேர் இதேபோல் பாதிக்கப்பட்டார்கள். நடு ரோட்டில் அந்த பெண்கள் முழு நிர்வாணமாக்கபட்டு பாசிஸ வெறியர்களால் கற்பழிக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்கள். வயது முதிர்ந்த பெண்களையும் கூட முழு நிர்வாணப்படுத்தி தீயில் வீசியெறிந்தார்கள். இவர்களெல்லாம் மனிதர்களே அல்ல, காக்கி அரைகால் சட்டை அணிந்த பேய்கள் என்று கூறுகிறார் அந்த பெண்மனி.

எரித்து கொல்லப்பட்ட இந்த முஸ்லிம்களின் சடலங்கள் அனைத்தும் ஒரு கபர்ஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. எரிந்து போன அந்த முஸ்லிம்களின் சடங்களை மனதில் தைரியம் இல்லாதவர்கள் நிச்சயமாக பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு கொடூரம். முஸ்லிம்களை எரித்த கயவர்கள் பாதியிலேயே அணைந்துவிடகூடாது என்பதற்காக அவர்களின் மீது முதலில் பெட்ரோலை, கேஸை ஊற்றி எரித்தார்கள். அதனால் எரிந்த முஸ்லிம்களில் பெரும்பான்மையோரின் உடல் முழுதும் வெந்து போன நிலையிலேயே இறந்திருக்கிறார்கள்.

தீயில் வெந்த முஸ்லிம்களின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக பருத்து, வயிறு வெடித்து குடல்கள் அனைத்து வெளியில் தள்ளி மிகவும் கொடூரமாக காட்சியளித்தது. சில சடலங்கள், முகம் வீங்கி கண்கள் வெளியில் பிதிங்கிய நிலையில் விகாரகமாக காட்சியளித்தது. இன்னும் சில உடல்கள் கறிகட்டையை போல் கருப்பாகவும், சில உடல்கள் சதைகள் வெடித்த நிலையிலும், மாம்பழ கொட்டையின் மீது ஈக்கள் கூட்டாக உட்கார்ந்தால் எப்படி காட்சியளிக்குமோ அப்படி தான் முஸ்லிம்கள் ஆக்கப்பட்டிருந்தார்கள். நெங்சு வெடித்து விடும் அளவுக்கு கொடூரங்கள் அங்கே நிறைவேற்றப்பட்டன.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

No comments: